27, சனவரி 2012
தொடர்ச்சியான ஐந்து நாள் உயர்வுகளின் முடிவில் தேசிய நிஃப்டி இந்த வருடத்தின் புதிய உயரங்களில் முடிவடைந்திருக்கின்றன. வாரத்தின் கடைசி நாள்…..வர்த்தகர்கள் லாபத்தினை உறுதி செய்திட நினைப்பது இயல்பானதே….
நாளின் துவக்கத்தில் தேசிய நிஃப்டியில் 5140 முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்குக் கீழ் நழுவும் பட்சத்தில் Selling pressure உருவாகும். பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
இன்றைய சந்தையை பொறுத்த வரையில் மேல் நிலையில் 5233 முக்கியமான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 5054 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
Atul,Bank of India,Batliboi,Bharat Elec,Cheslind Textil,GSFC,Hind Nat Glass,Hitachi Home,Karur Vysya,Kriti Industrie,Lanco Industrie,NHPC,NTPC,Peacock Ind,Petronet LNG,Ponni Sugars(E),Rane Madras,Savita Oil Tech,Shanthi Gears,Swaraj Engines,Tata Sponge Iro,Wyeth
25, சனவரி 2012
மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளின் எதிரொலியாக நேற்றைய சந்தையில் தேசிய நிஃப்டியானது நமது வாராந்திர தடை நிலையை தொட்டு மீண்டிருக்கிறது. வங்கித் துறை பங்குகளில் தொற்றிக் கொண்டிருக்கும் உற்சாகம் தொடருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இன்று FNO expiry
தேசிய நிஃப்டியின் வாராந்திர தடை நிலையான 5133 உடைபட்டு விட்ட நிலையில் அடுத்து 5223 தடை நிலையாக இருக்கும். எனினும் நேற்றைய உயர்வுகள் ஒரு செய்தியினால் உந்தப் பட்டு உண்டான உயர்வுகள் என்பதை மனதில் கொள்ள வேண்டுகிறேன். செய்தியின் தாக்கம் தணிந்து விட்ட நிலையில் கணிசமான பின்னடைவுகள் உண்டாவது இயல்பே.
இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் 5145 முக்கியமான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகளை மீறினால் மட்டுமே இனி உயர்வுகள் சாத்தியமாகும். கீழ் நிலையில் 5058 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும். நாளின் துவக்கத்தில் இவ்விரு நிலைகளில் ஏதேனுமொன்று உடைபட்டால், அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
AP Paper Mills,BEML,Bank of Baroda,Deepak Fert,Himatsingka Sei,IRB Infra,JB Chemicals,JSW Holdings,Jayshree Tea,Kirloskar Ind,Kirloskar Oil,L&T Finance,Marg,Mirc Electronic,Oracle Financ,Patni Computer,Rural Elect Cor,Sterlite Techno,Supreme Ind,Surana Corp,Tata Comm,Tata Global Bev,Union Bank,Vijaya Bank,WABCO India
24,சனவரி 2012
எதிர் பார்த்த எல்லைகளின் ஊடாக நேற்றைய சந்தைகள் பயணித்திருக்கின்றன. இன்றைய சந்தையின் நகர்வுகளை மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புதான் தீர்மானிக்கப் போகிறது. வட்டி விகிதத்தை குறைக்கும் அறிவிப்பினையே பெரும்பாலான சந்தை வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஒரு சிலர் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு எதிர்பார்ப்புகளும் சந்தைகளை எதிரெதிர் திசைகளில் நகர்த்தும் வாய்ப்புடையவை என்பதால் தின வர்த்தகர்கள் அறிவிப்பு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம். மற்ற படி நாளை மறுநாள் FNO expiry இருப்பதால் சந்தைகள் நிலையற்ற தன்மையுடையதாகவே இருக்கும். சிறிய வர்த்தகர்கள் விலகியிருந்து வேடிக்கை பார்ப்பதே நல்லது.
நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த நிலைகளே இன்றைக்கும் பொருந்தும் என்பதால், மீண்டுமொரு தடவை நேற்றைய பதிவினை வாசித்து விட வேண்டுகிறேன்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
3i Infotech,Ajanta Pharma,Biocon,Cairn India,Ceat,Edelweiss Cap,Everest Ind,GIC Housing Fin,Godawari Power,Grasim,Greaves Cotton,Grindwell Norto,HMT,Hyderabad Ind,Indian Metals &,Kirloskar Bros,Kirloskar Broth,Lupin,NOCIL,Nilkamal,Prism Cement,Supreme Petro,Thangamayil,YES BANK,eClerx Services
23, சனவரி 2012
தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்திருக்கின்றன. கடந்த பதினைந்து மாதங்களாய் தொடரும் சரிவுகள் முடிவுக்கு வந்து விட்டதைப் போல ஒரு தோற்றம் ஊடகங்களால் உருவாக்கப் படுகிறது. இது எத்தனை தூரத்திற்கு நிஜம் என்பதை புரிந்து கொள்வது அவசியம்.கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இது தேசிய நிஃப்டியின் வாராந்திர வரைபடம். கடந்த பதினைந்து மாதங்களுக்கானது.
கடந்த பதினைந்து மாதங்களில் சந்தைகள் தெளிவான ஒரு சரிவுப் பாதையில் பயணிப்பதை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் சந்தைகள் ஐந்து முறை மேலே Trend line ஐ உடைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்திருப்பதை அவதானிக்கலாம்.ஆறாவது முறையாக இந்த வாரம் மேல் நிலைகளை எட்டும் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்ற்ன.இந்த நிலையில் இதை வாங்கிடுங்கள், அதனை வாங்கி வையுங்கள் என்பதாக செய்யப் படும் ஊடக பரிந்துரைகளின் பின்னாலிருக்கும் நம்பகத் தன்மை கேள்விக்குரியதே.
இந்த வார சந்தைகளை பார்ப்போம்…..
தொடர்ச்சியான மூன்று வார உயர்வுகள், ஏமாற்றத்தை தந்த ரிலையன்ஸ் முடிவுகள், நாளை எதிர்பார்க்கப் படும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், நாளை மறு நாளைய FNO expiry, வியாழனன்றைய சந்தை விடுமுறை இத்துடன் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் என கலவையான காரணிகளை முன்வைத்து இந்த வாரச் சந்தைகள் துவங்குகின்றன.
கடந்த வாரத்தில் குறிப்பிட்டவாறே தேசிய நிஃப்டியில் 5064 முக்கியமான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்கு மேல் இன்றைய சந்தைகள் முடிவடையும் பட்சத்தில் வாரத்தில் நெடுகே 5133 வரையில் உயரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் கடுமையான Selling Pressure உருவாகும் என எதிர்பார்க்கிறேன். கீழ் நிலையில் 4933 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும். என்னளவில் தற்போதைய உயர்வுகள் தற்காலிகமாய் 5064 நிலைகளில் முடிவடையும் என்றே எதிர்பார்க்கிறேன்.
இனி இன்றைய சந்தைக்கான வர்த்தக உத்தி…..
ரிலையன்ஸ் முடிவுகள் நாளின் துவக்கத்தில் சலசலப்பினை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம். FNO expiry காரணமாக சந்தையில் நிலையற்ற தன்மை நிலவும்.
நாளின் துவக்கத்தில் 5033 மிக முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே இன்றைய சந்தையின் திசைகள் தீர்மானிக்கப் படும். மேல் நிலையில் 5089 தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 4991 தாங்கு நிலையாக இருக்கும்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
Ashoka Buildcon,Cera Sanitary,Colgate,Coromandel Int,DB Corp,Electrosteel,Federal Bank,GAIL,Gandhi Spl Tube,Geometric,Idea Cellular,Jyothy Labs,KPIT Cummins,Kotak Mahindra,Lakshmi Machine,Onward Tech,Phoenix Mills,RPG Life,Saksoft,Shree Cements,Smartlink Net,Sterlite Ind,Super Sales,Torrent Pharma,Vardhman Text
19, சனவரி 2012
நேற்றைய சந்தைகள் எதிர்பார்த்த எல்லைகளின் ஊடாகவே பயணித்திருக்கின்றன. இன்றைய சந்தைகளுக்கென புதிதான நிலைப்பாடு ஏதுமில்லை. நேற்றைய பதிவில் குறிப்பிட்ட நிலைகளே இன்றைக்கும் பொருந்திடும்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்க இருக்கும் நிறுவனங்கள்….
Ador Welding,Bajaj Auto,Bajaj Holdings,Can Fin Homes,CenturyPlyboard,Dish TV India,Dolphin Offshor,Godrej Proper,HDFC Bank,Hero Motocorp,Hindustan Media,IFCI,Mastek,Oriental Hotels,Peninsula Land,SKS Microfin,Symphony,Transwarranty
18, சனவரி 2012
2012 துவங்கி இது வரையில் கரடிகளுக்கு வாய்ப்பு எதனையும் தராமல், காளைகளின் போக்கில் சந்தைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
என்னுடைய எதிர்பார்ப்பில் தேசிய நிஃப்டியின் தற்போதைய உயர்வுகள் 5065 நிலைகளில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். இந்த நிலைகளில் வலுவான Selling Pressure உருவாவதை தவிர்க்க இயலாது. இந்த வாரம் சந்தைகள் இந்த நிலைகளுக்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே மேலதிக உயர்வுகளை எதிர்பார்க்க முடியும். இல்லையேல் மளமளவென சந்தைகள் பின்னடைவதை தவிர்க்க இயலாது.
இன்றைய சந்தைகளைப் பொறுத்த வரையில் நாளின் துவக்கத்தில் 4934 முக்கியமான நிலையாக இருக்கும். நாளின் துவக்கத்தில் சந்தைகள் இந்த நிலைகளை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பொறுத்தே சந்தையின் திசை அமையும். இந்த நிலை தினவர்த்தகர்களுக்கானது.
இன்று தேசிய நிஃப்டியில் 5023 முக்கியமான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 4898 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
Agro Tech Foods,Bajaj Finance,Bajaj Finserv,Infotech Enter,Jindal Steel,MindTree,NIIT Tech,Shakti Pumps,Sudar Garments,Tata Coffee
16, சனவரி 2012
கடந்த வாரத்தின் முடிவில் சந்தைகள் முந்தைய வாரத்தினை விடவும் 2% விழுக்காடுகள் வரை உயர்வடைந்திருக்கின்றன.சந்தைகள் கணிசமான உயர்வுகளோடு முடிவடைந்திருந்தாலும் கூட தேசிய நிஃப்டி 4917 நிலைகளை மீறாமல் போனதில் கொஞ்சம் ஏமாற்றமே!.
இரண்டாவது வாரமாய் உயர்வடைந்திருக்கும் சந்தைகளின் உயர்வு இந்த வாரமும் தொடருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தொடரும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பொருளாதாரர நெருக்கடி நிலமைகள் சந்தையின் திசையினை எப்படியும் மாற்றி விடும் என்பதை மனதில் கொள்ளவும்.
இந்த வாரத்தினை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் இரண்டு நிலைகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கீழ் நிலையில் 4747 வ்லுவான தாங்கு நிலையாக இருக்கும். மேல் நிலையில் 4972 முக்கியமான தடை நிலையாக இருக்கும். அநேகமாய் சந்தைகள் இந்த இரண்டு நிலைகளுக்குள் ஊடாடும் வாய்ப்புகளையே எதிர்பார்க்கிறேன்.
இவற்றில் ஏதேனும் ஒரு நிலை உடைபட்டால் அந்த திசையில் அதிக பட்சம் 100 புள்ளிகள் வரையிலான நகர்வுகளை எதிர்பார்க்கலாம். இது வாராந்திர நிலைகளுக்கு மட்டுமே.
இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் நாளின் துவக்கத்தில் 4840 முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே சந்தையின் திசை மற்றும் தின வர்த்தகம் அமையும்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்…
Auto Stampings,Dewan Housing,ING Vysya Bank,Magma Fincorp,Morarjee Text,Motilal Oswal F,South Ind Bk,Tata Elxsi,Tata Inv Corp
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்பர்கள், நண்பர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சரவணக்குமார்!!, உனக்கு என்ன ஆச்சு!, சித்திரை ஒண்ணுதானே தமிழ் புதுவருடம், அந்த கருணாநிதிதான் அறிவில்லாம மாத்தினார். இப்பதான் அம்மா வந்து அதை சரி பண்ணீட்டாஙக்ளே, அதெல்லாம் உனக்குத் தெரியாதா?, என்று என் மீது அக்கறையோடு கேட்க நினைப்பவர்கள் தயவு செய்து இனி வரும் பத்திகளை படிக்க வேண்டுகிறேன்.
நமது நாட்காட்டிகள் சூரியனை அடிப்படையாக வைத்தே அமைக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன.
ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப் பட்ட பகுதியில் விழுகிறது.நமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது நகர்வதாய் தோன்றுகிறது. இதனால்தான் பருவ கால மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்கள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன.பூமி சூரியனைச் சுற்றும் நீள் வட்டப் பாதையில் ஒரு புள்ளியில் இருந்து கிளம்பி மீண்டும் அதே புள்ளிக்கு வருவதையே ஒரு ஆண்டாக கணக்கிடுகிறோம்.
இதெல்லாம் நிரூபிக்கப் பட்டு, நடைமுறையில் இருக்கும் அடிப்படை அறிவியல், இப்போது கொஞ்சம் தமிழர்களின் பக்கம் வருவோம்.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் அறுபது. இவை சுழற்சியில் வரும். ஆண்டுப் பிறப்பு சித்திரை மாதம் ஒன்றாம் தேதியில் துவங்குவதாக காலம் காலமாய் நம்பி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் தனித் தனி பெயர் உண்டு.எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள். ஒன்று கூட தமிழ் பெயர் கிடையாது.இவை எல்லாம் அரச குமாரர்களின் பெயர்களாம். யாரிந்த அரச குமாரர்கள்?, அவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?….அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதையிது!
அபிதான சிந்தாமணி என்கிற நூலில்தான் இந்த அறுபது அரச குமாரர்களின் கதை சொல்லப் பட்டிருக்கிறது. கலியுக வரதனான கண்ணனும், நாரதரும் கலவி செய்ய பிறந்தவர்கள்தான் இந்த அரச குமாரர்கள். நாரதர் ஆணாயிற்றே என சந்தேகம் வந்தால் அதற்கும் அந்த நூலில் விளக்கம் இருக்கிறது. கண்ணன் அறிவுரைப் படி யமுனையில் குளித்த நாரதர் பெண்ணாகிறார்.இருவரும் கூடி மகிழ்ந்து ஆண்டுக்கொன்றாய் அறுபது பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்களிலே தமிழ் வருடங்கள் அறுபதாயிற்று.
இதுதானா தமிழனின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்?. இதையா காலம் காலமாய் போற்றிக் காத்திட வேண்டுமென நினைக்கிறீர்கள்?.
இப்போது கொஞ்சம் அறிவார்த்தமாய் அலசுவோம்.தமிழர்களின் வானியல் அறிவு மிகவும் பழமையானது,உயர்வானது, இன்றைய கால அளவுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. இன்னும் சொல்வதாயின் தற்போதைய கால அளவைகளை விடவும் மிகத் துல்லியமானது. ஒரு நாளை ஆறு பொழுதுகளாக, அறுபது நாழிகைகளாய் பிரித்து கூறியிருக்கின்றனர்.அதே போல ஒரு ஆண்டினை ஆறு பருவ காலமாய் பிரித்திருக்கின்றனர். இது மற்ற சமூக இனங்களில் காண முடியாதது. இவை எல்லாம் இன்றைக்கும் பொருந்தி வருவதில்தான் தமிழனின் மேதமை தனித்து மிளிர்கிறது.
இத்தனை தெளிவுடையவர்களுக்கு ஆண்டின் முதல் நாளினை நிர்ணயிக்கத் தெரிந்திருக்காதா? மிக நிச்சயமாக தெரிந்தேதான் தை மாதத்தின் முதல் நாளினை ஆண்டின் முதல் நாளாக அமைத்திருந்தனர். பக்தி மார்க்கம் மற்றும் வேத மரபின் ஆதிக்கத்தினால் பழந்தமிழரின் அறிவார்த்தமான செயல்கள் அடிபட்டுப் போய்விட்டன.
தமிழர்கள் ஒரு ஆண்டினை ஆறு காலமாய் பிரித்திருந்தனர் என்று பார்த்தோம். அவை இளவேனிற் காலம் (தை,மாசி மாத காலம்),முதுவேனில் காலம்(பங்குனி,சித்திரை மாத காலம்), கார் காலம்(வைகாசி,ஆனி மாத காலம்),கூதிர் காலம்(ஆடி,ஆவணி மாத காலம்),முன்பனிக் காலம்(புரட்டாசி,ஐப்பசி மாதக் காலம்),பின்பனிக் காலம்(கார்த்திகை,மார்கழி மாத காலம்) ஆகும். இந்த ஒவ்வொரு பருவ காலமும் இரண்டு மாதஙக்ளை உள்ளடக்கியது.
இந்த மாதங்களை தமிழர்கள் எப்படி வகுத்தனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இப்போதைய புவியியல் அறிஞர்கள் கற்பனையான ரேகைகளைக் கணக்கில் கொள்வதைப் போல அன்றே தமிழர்கள் பூமியை முப்பது டிகிரியாக பன்னிரெண்டு பாகங்களாய் பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு இராசியின் பெயரைச் சூட்டினர். இந்த பன்னிரெண்டு ராசிக்கு என இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் தரப் பட்டிருந்தன.இதையொட்டியே சோதிட அறிவியல் அமைகிறது. சூரியன் இந்த ராசிகளில் நுழையும் காலத்தை அந்த மாதங்களின் ஆரம்ப தினமாக வரையறுத்தனர்.
இந்த இடத்தில் மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த முப்பது டிகிரியில் சூரியன் பயணிக்கும் போது வரும் முழு நிலவு தினத்தன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ,அதன் பெயரே அந்த மாதங்களின் பெயர்களாய் குறிக்கப் பெற்றன. இம் மாதிரியான அறிவியல் ரீதியான தகவல்கள் எல்லாம் மதத்தின் பெயரால், புராணங்களின் பெயரால் நம்மிடம் இருந்து மறைக்கப் பட்டன. இவை தற்செயலாக நிகழ்ந்ததா இல்லை திட்டமிட்டு செய்யப் பட்டதா என்பது முடிவில்லாத விவாதத்தையே உண்டாக்கும்.
இனி தை ஒன்று ஏன் தமிழ் புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அலசுவோம்.
தமிழர்கள் பருவ காலத்தை ஆறு பிரிவாகக் கூறியிருப்பதை மேலே பார்த்தோம். அதில் இளவேனிற் காலமே முதல்வாவதாக வருகிறது. இந்த காலத்தின் முதல் மாதமாக தை மாதம் இருக்கிறது. முதல் பருவ காலத்தின் முதல் மாதம் என்ற வகையில் தை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்கமாக இருக்க வேண்டும். இதை யாரும் மறுத்திட முடியாது.
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். போக்கி என்பதன் மருவலே போகி ஆனது. பழையனவற்றை கழிக்கும் ஒரு நாளாக இதை தமிழர்கள் காலம் காலமாய் கொண்டாடுகிறார்கள். பழையனவற்றை மார்கழியின் கடைசி நாளில் கழித்தால், தை முதலாம் தேதியன்று புதிதாக எதையோ துவங்குவதாகத்தானே ஆகும்.
சமூக மற்றும் வரலாற்றியல் ரீதியாக இந்த நாளில் வீட்டை புதுப்பித்து வர்ணம் பூசி, தோரணம் கட்டி, சர்க்கரைப் பொங்கலிடுதல் என அடிப்படையில் ஒரு கொண்டாட்ட தினமாகவே இருந்து வருகிறது. வேறெந்த மாத துவக்கத்தின் முதல் நாளுக்கும் இத்தகைய கொண்டாட்டஙக்ள் இல்லை என்பதை மனதில் கொள்ளவும்.
நவீன அறிவியலின் படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதிதான் பூமி சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. சூரியனை நெருங்கி வரும் இந்த நாளில் தமிழர்கள் சூரியனுக்கு பொங்கலிடுவதையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இது தற்செயலாக நிகழ்கிறதா இல்லை நமது முன்னோர்கள் தீர ஆராய்ந்து இந்த நாளை ஆண்டின் துவக்கமாக அமைத்திருக்கலாம்.
மார்கழி மாதத்தின் கடைசி வாரங்களை சோதிட இயலில் கர்பக் காலம் என்று கூறுவர்.கிராமப் புறங்களில் இதை தெப்பக் காலம் என்று இப்போதும் கூறுவதுண்டு. இந்த கால கட்டத்தில்தான் அடுத்த ஓராண்டுக்கு மழை பெய்யுமா?, எப்போது பெய்யும்?, எவ்வளவு பெய்யும்? என்றெல்லாம் கணிப்பார்கள்.இது வேறெந்த மாதத்திலும் இல்லை. தை துவங்கி மார்கழி வரையிலான ஓராண்டிற்கு இந்த கணிப்பு முறை பயன்படுகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற் சொலவடை இன்றும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. வழி பிறத்தல் எனப்து ஒரு புதிய ஆண்டின் துவக்கத்தையே குறிக்கிறது.
இவை தவிர இன்னும் சில ஆதாரங்களிருக்கின்றன, இந்த தைத் திருநாளின் சிறப்பினை பல்வேறு பழந்தமிழ் நூல்களிலும் காணக் கிடைக்கின்றன.
தமிழன் இயற்கையோடு இனைந்த வாழ்க்கையை வாழ்ந்தவன், இந்த ஆறு பருவ காலங்கள் ஒவ்வொன்றாய் அவன் வாழ்க்கையை ஆள்வதையே ஆண்டு என்று குறிப்பிடுகிறான். ஆறு பருவம் அவனை ஆண்டால் அதை ஒரு சுற்றாக, பூரணமாக கணக்கிட்டான்.இப்படித்தான் தமிழனின் ஆணடுகள் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தது. இதை மீட்டெடுத்து சிறப்புச் செய்வதே நாம் நம் மூதாதையர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனாய் இருக்கும்.
நண்பர்களே!, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்,புராணங்கள் கூறும் ஆபாசக் கதையின் ஊடாக ஒரு இனத்தின் ஆண்டுகள் அமைந்திருக்குமா?, அல்லது தேர்ந்த வானியல் அறிவுடன் பருவ காலத்தை முன் வைத்து ஆண்டுகள் அமைக்கப் பட்டிருக்குமா?.
என்னுடைய நோக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தின் உணர்வுகளை அவமதிப்பதில்லை. காலம் காலமாய் மறைக்கப் பட்டிருக்கும் ஒரு இனத்தின் ஆதார உரிமைகளை மீட்டெடுத்து சிறப்பிக்க நினைக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.
மீண்டும் ஒரு முறை…..
அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
12, சனவரி 2012
சந்தைகள் தமது உயரங்களை தக்க வைக்கும் விதமாய் பெரிதான நகர்வுகள் இன்றி பக்கவாட்டில் நிறைவடைந்திருக்கின்றன.நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த நிலைகளே இன்றைக்கும் பொருந்தும் என்பதால் விரிவாய் எழுதிட ஏதுமில்லை.
காலையில் வெளியாகும் இன்ஃபோசிஸ் நிறுவன முடிவுகள் சந்தையின் ஆரம்ப பரபரப்புக்கு பயன்படும். மற்றபடி நாளின் துவக்கத்தில் 4830 முக்கியமான நிலையாக இருக்கும். நாளின் துவக்கத்தில் இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே நாளின் நெடுகில் சந்தையின் நகர்வுகள் அமையும்.
மேல் நிலையில் 4918 வலுவான த்டை நிலையாக இருக்கும். இந்த நிலைகளில் சந்தைகள் தேங்கும் வாய்ப்பினை எதிர்பார்க்கிறேன். கீழ் நிலையில் 4772 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.
இன்று தமது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
Asahi Fibres,Bervin Invest,DCB,Geojit BNP,GRUH Finance,HDFC,Infosys,Libord Finance,Libord Sec,Sanghi Ind,Sheel Int,Soma Papers,TTK Prestige
11, சனவரி 2012
கடைசியில் நாம் ஆவலாய் எதிர்பார்த்திருந்த நிலைகள் உடை பட்டு சந்தைகள் வலுவான காளைகளின் கட்டுப் பாட்டில் வந்திருக்கிறது. கடந்த வாரத்தில் எதிர்பார்த்த இந்த கட்டுடைப்பு நேற்றைய சந்தையில் சாத்தியமாகி இருக்கிறது. முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டதைப் போலவே தற்போதைய உயர்வுகள் 4918 வரையில் நீடிக்கும் சாத்தியங்களை எதிர்பார்க்கிறேன்.
இன்றைய சந்தைகளைப் பொறுத்த வரையில், நாளின் துவக்கத்தில் 4830 முக்கியமான நிலையாக இருக்கும். நாளின் துவக்கத்தில் இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே நாளின் நெடுகில் சந்தையின் நகர்வுகள் அமையும்.
மேல் நிலையில் 4918 வலுவான த்டை நிலையாக இருக்கும். இந்த நிலைகளில் சந்தைகள் தேங்கும் வாய்ப்பினை எதிர்பார்க்கிறேன். கீழ் நிலையில் 4772 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.
தற்போது முடிவடைந்துள்ள அமெரிக்க சந்தைகள் நம்பிக்கையோடு முடிவடைந்திருக்கின்றன.கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வு நிலையில் இருப்பது சர்வதேச சந்தைகளில் நம்பிக்கையை தக்க வைக்கும். மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகத் துவங்கி இருக்கும் இந்தச் சூழலில் நாளை வெளியாக இருக்கும் HDFC, INFOSYS நிறுவன முடிவுகள் சந்தை நகர்வின் அடுத்த கட்டத்தினை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கிறேன்.


