ஒரு வழியாக மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலாகி இருக்கிறது. தனித்துவமான அல்லதுதைரியமான அறிவிப்புகள் எதுவுமில்லாமல் அனைவரையும் அரவனைக்கிற ஒன்றாகவேஅறிவிக்கப் பட்டிருக்கிறது.
கூட்டனி அரசியலின் நெளிவு சுழிவுகளின் ஊடே பிழைத்துக் கிடக்க வேண்டியதன் அவசியத்தை மனதில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. புதிதான திசைகளோ, தைரியமான முடிவுகளோ எதுவும் இல்லாமல் ஏற்கனவே இருக்கும் நிலைப் பாட்டில் ஆங்காங்கே சில மாற்றங்கள் மட்டுமே இந்த நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சம்.
சந்தைகளைப் பொறுத்தவரையில் செய்திகளின் தாக்கத்தினால் மேலும் கீழுமாய் நகர்ந்தாலும் இறுதியில் நான்காவது வாரமாக பின்னடைந்தே முடிவடைந்திருக்கின்றன. எந்தவொரு துறையிலும் பெரிதாக அறிவிப்புகளை கொண்டிராத நிதிநிலை அறிக்கையின் முழுமையான தாக்கம் சந்தைகளில் இனி வரும் நாட்களில்தான் உணரப்படும்.
இனி சந்தையின் வாராந்திர எதிர்பார்ப்புகளை பார்ப்போம்.
தேசிய நிஃப்டியை பொறுத்தவரையில் வாரத்தின் துவக்கத்தில் 5270 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலைகளில் சந்தைகள் தேங்கும் பட்சத்தில் எதிர் வரும் நாட்களில் 5450 வரையில் உயர்ந்திடும் வாய்புகளை மறுப்பதற்கில்லை. மேல் நிலையில் 5375 முக்கியமான தடை நிலையாக இருக்கும்.
இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் 5285 மிக முக்கியமான திருப்பு நிலையாக இருக்கும். மத்திய இரயில்வே மந்திரி தனது பதவியினை விட்டு விலகியிருப்பதை அடுத்து தொடரும் அரசியல் நிகழ்வுகள் நாளின் துவக்கத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
Gap up ஆக துவங்கிய சந்தைகள் நாளின் நெடுகே உயரங்களை தக்க வைக்க இயலாமல் தடுமாறி பின்னடைந்திருக்கின்றன.
அடுத்த நான்கு நாட்களுக்கு சந்தைகள் மேலும் கீழுமால் இலக்கில்லாமல் ஊசலாடும் வாய்ப்புகளே அதிகம் இருப்பதால் தின வர்த்தகர்கள் உடனுக்குடன் லாபங்களை உறுதி செய்து கொள்ளவும் அல்லது வர்த்தகத்தில் இருந்து விலகி நின்று வேடிக்கை பார்க்கலாம்.
இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரை தேசிய நிஃப்டியில் 5288 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும். இதற்கு கீழ் முடிவடைந்தால் மட்டுமே சந்தையில் பனவீனம் தலைதூக்கும். அது வரையில் காளைகளுக்கு பெரிதான பாதிப்பு ஏதுமில்லை.
மேல் நிலையில் 5398 முக்கியமான தடை நிலையாக இருக்கும்.
ஒரு வழியாக தேர்தல் திருவிழாக்கள் நிறைவடைந்திருக்கின்றன. மத்திய அரசின் ஆளும் காங்கிரஸ் கடுமையான பினனடைவை சந்தித்திருக்கிறது. இதன் எதிரொலியை நேற்றைய சந்தைகளும் பிரதிபலித்தன. எதிர் வரும் நாட்களில் கூட்டனிக் கட்சிகளின் நெருக்குதலால் மத்திய அரசு பலவீனமான ஒன்றாகி விடும் ஆபத்திருப்பதாக பேச்சுகள் துவங்கி விட்டன. இது நிச்சயம் சந்தைகளுக்கு அத்தனை நல்ல செய்தி இல்லை.
இன்றைய சந்தைகளைப் பொறுத்த வரையில் எனக்கு பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லை. எனவே இன்றும் திங்கட் கிழமைய நிலைகளின் ஊடே பயணிக்கும் வாய்ப்பினையே எதிர்பார்க்கிறேன்.
தேசிய நிஃப்டியில் மேல் நிலையில் 5463 வலுவான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 5087 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இவ்விரு நிலைகளில் ஏதேனும் ஒன்று உடைபட்டால் அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும்.பயன்படுத்த்க் கொள்ளுங்கள்…..
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை தினம். ஆளும் காங்கிரஸ் கூட்டனி எத்தனை மாநிலங்களை வென்றெடுக்கிறது என்பதைப் பொறுத்தே நாளின் சந்தை நகர்வுகள் அமையும்.
நேற்றைய பதிவில் குறிப்பிட்ட நிலைகள் இன்றைக்கும் பொருந்தும்.
தேசிய நிஃப்டியில் மேல் நிலையில் 5463 வலுவான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 5087 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இவ்விரு நிலைகளில் ஏதேனும் ஒன்று உடைபட்டால் அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும்.பயன்படுத்த்க் கொள்ளுங்கள்…..
ஒரு வழியாக ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. நாளை வாக்குகள் எண்ணிக்கை. உத்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வும் பட்சத்தில் அது சந்தைகளுக்கு மோசமான ஒன்றாக கருதப் படும். இதை நினைவில் கொள்ளுங்கள்.
கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து எகிறிக் கொண்டிருப்பது நல்லதில்லை. இது நாட்டின் மிகமுக்கியமான மூன்று வளர்ச்சிக் கூறுகளை கடுமையாக பாதிக்கும். அவை… 1.Inflation, 2.Fiscal Deficit,3.Current account deficit. இவை கடும் பாதிப்புக்கு உள்ளானால் அது யார் தலையில் விடியும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்னும் பத்து நாளில் அதாவது மார்ச்16ம் தேதி மத்திய நிதி நிலை தாக்கலாக இருக்கிறது. இதனிடையில் மத்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் எதிர்வரும் மார்ச் 15ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.இவை குறித்த கருத்தாடல்கள் இனி வரும் நாட்களில் சந்தைச் சூழலில் ஏகப் பட்ட குழப்பங்களை உருவாக்கிடும் என எதிர்பார்க்கலாம்.
தொடர்ச்சியான ஏழு வார உயர்வுக்குப் பின்னர் சந்தைகள் இரண்டாவது வாரமாய் பின்னடைந்து முடிவடைந்திருக்கின்றன.
இப்படியான சூழலில் இந்த வாரம் துவங்குகிறது.
இந்த வாரத்தைய சந்தைகளில் இரண்டு நிலைகள் முக்கியமானதாக இருக்கும். இவை இரண்டையும் சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த மாதத்தின் திசையினை தீர்மானிக்க இயலும்.
தேசிய நிஃப்டியில் மேல் நிலையில் 5463 வலுவான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 5087 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இவ்விரு நிலைகளில் ஏதேனும் ஒன்று உடைபட்டால் அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும்.பயன்படுத்த்க் கொள்ளுங்கள்…..
தேசிய நிஃப்டியின் மாதாந்திர வரைபடம் இது. கடந்த ஒராண்டுகளாய் நீடித்த சரிவுப் பாதை முதல் முறையாக உடைக்கப் பட்டிருப்பதை இந்த படத்தினூடே தெளியலாம். இத்தகைய அமைப்பு நீண்ட கால நோக்கில் சந்தைக்ளுக்கு நன்மைதரும் ஆரம்பமாய் கருதலாம். எனினும் இனி வரும் நாட்களில் ஃபெப்ரவரி மாதத்தின் கீழ் நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே நீண்ட கால நோக்கில் முடிவுகளை எடுக்க இயலும்.
எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அரசின் கொள்கை அறிவிப்புகள் என்ற பெயரில் நிறைய செய்திகள் புழங்க ஆரம்பிக்கும். இவையே சந்தையின் திசையினை தீர்மானிப்பதாக இருக்கும். எனவே இந்த உயர்வில் லாபம் சம்பாதித்தவர்கள் லாபத்தினை உறுதி செய்யத் துவங்குவர் என எதிர்பார்க்கிறேன்.
இனி இன்றைய சந்தைகளை கவனிப்போம்.
இன்றைய சந்தையில் 5465 நிலைகள் முக்கியமானதாக இருக்கும். இந்த நிலைகளில் கடுமையான தடையை சந்திக்க நேரும். இந்த நிலைகளை மீற முடியாத பட்சத்தில் சந்தையில் லாபத்தினை உறுதி செய்யும் போக்கில் Selling pressureஉருவாவதை தவிர்க்க இயலாது.
கீழ் நிலையில் 5350 நிலைகள் முக்கியமானதாக இருக்கும், இந்த நிலைகளுக்குக் கீழ் இன்றைய சந்தைகள் முடிவடையுமானால் எதிர் வரும் நாட்களில் பெரிய அளவில் பின்னடையும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.
மாதத்தின் கடைசி நாள்….
திங்கட் கிழமை சரிந்த சந்தைகள் நேற்று மீண்டிருக்கின்றன.
இன்றைய சந்தைகளை பொறுத்த வரையில் தேசிய நிஃப்டியின் முடிவு முக்கியத்துவம் பெறும். என்னுடைய எதிர்பார்ப்பில் தேசிய நிஃப்டியினை 5453 நிலைகளின் அருகாமையில் முடிவடையச் செய்யும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்.
நாளின் துவக்கத்தில் 5406 முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளை மீறினால் மட்டுமே உயர்வுகள் சாத்தியமாகும். கீழ் நிலையில் 5320 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.
* தொடர்ச்சியான மின் வெட்டின் காரணமாய் பதிவுகளை நேரத்திற்கு வலையேற்ற இயலவில்லை.
