24,சனவரி 2012
எதிர் பார்த்த எல்லைகளின் ஊடாக நேற்றைய சந்தைகள் பயணித்திருக்கின்றன. இன்றைய சந்தையின் நகர்வுகளை மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புதான் தீர்மானிக்கப் போகிறது. வட்டி விகிதத்தை குறைக்கும் அறிவிப்பினையே பெரும்பாலான சந்தை வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஒரு சிலர் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு எதிர்பார்ப்புகளும் சந்தைகளை எதிரெதிர் திசைகளில் நகர்த்தும் வாய்ப்புடையவை என்பதால் தின வர்த்தகர்கள் அறிவிப்பு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம். மற்ற படி நாளை மறுநாள் FNO expiry இருப்பதால் சந்தைகள் நிலையற்ற தன்மையுடையதாகவே இருக்கும். சிறிய வர்த்தகர்கள் விலகியிருந்து வேடிக்கை பார்ப்பதே நல்லது.
நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த நிலைகளே இன்றைக்கும் பொருந்தும் என்பதால், மீண்டுமொரு தடவை நேற்றைய பதிவினை வாசித்து விட வேண்டுகிறேன்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
3i Infotech,Ajanta Pharma,Biocon,Cairn India,Ceat,Edelweiss Cap,Everest Ind,GIC Housing Fin,Godawari Power,Grasim,Greaves Cotton,Grindwell Norto,HMT,Hyderabad Ind,Indian Metals &,Kirloskar Bros,Kirloskar Broth,Lupin,NOCIL,Nilkamal,Prism Cement,Supreme Petro,Thangamayil,YES BANK,eClerx Services
மறுமொழிகள் இட இயலாது.